மதுரை, நவ. 22: மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த பாண்டி, சமூக ஆர்வலர். இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திலும் பாண்டி தகவல் பெற்றுள்ளார். இதன்படி, 2010 முதல் 2020 அக்.வரை 47,244 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவி பணம் வழங்கப்படுகிறது. இதன்படி 2010 முதல் 2020 அக். வரை 6,565 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதாக தகவல் தரப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு பார்க்கும்போது, 40,679 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை அரசு வழங்க வேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வின்றி, இந்த உதவித்தொகையை வாங்க வழி தெரியாமல் உள்ளனர்.