பெருங்குடி அருகே பரபரப்பு சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தை கொலை 3 பேர் கைது; மகனுக்கு போலீசார் வலை

அவனியாபுரம், நவ. 22: பெருங்குடி அருகே சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த மகனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் பெருங்குடியை அடுத்த வளையங்குளத்தைச் சேர்ந்தவர் மொட்டையன் (56), தோட்ட காவலாளி. இவரது மகன்கள் முத்துமுனியாண்டி, முத்துமணிராஜா. இந்நிலையில், மொட்டையன் நேற்று காலை தான் வேலை செய்த தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். பெருங்குடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரனையில், ‘மொட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொத்துக்களை இளையமகன் முத்துமணிராஜாவுக்கு எழுதி வைத்துள்ளார். இதனால், கோபமடைந்த மூத்த மகன் முத்து முனியாண்டி கூலிப்படை மூலம் தந்தையை கொலை செய்தது தெரிய வந்தது. பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வளையங்குளம் பகுதியைச் சேர்ந்த அருள், செல்வம், சிலைமான் எல்.கே.டி நகரைச் சேர்ந்த ராமர் ஆகியோர் மூவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான முத்துமுனியாண்டியைத் தேடி வருகின்றனர்.

Related Stories: