அவனியாபுரம், நவ. 22: பெருங்குடி அருகே சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த மகனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் பெருங்குடியை அடுத்த வளையங்குளத்தைச் சேர்ந்தவர் மொட்டையன் (56), தோட்ட காவலாளி. இவரது மகன்கள் முத்துமுனியாண்டி, முத்துமணிராஜா. இந்நிலையில், மொட்டையன் நேற்று காலை தான் வேலை செய்த தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். பெருங்குடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.