×

வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

சின்னாளபட்டி, நவ. 22: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ப.க.சிவகுருசாமி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் மணி வரவேற்றார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர்கள் தண்டபானி, நாகராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிலால் உசேன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் விவேகானந்தன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, பேரூர் கழக செயலாளர்கள் ராமபுரம் ராஜா, கன்னிவாடி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ கலந்து கொண்டார். கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேசினார். இக்கூட்டத்தில் ஒன்றிய துணைப்பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பார்த்தசாரதி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எம்.முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : meeting ,polling agents ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...