ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை கொடைரோட்டில் குடிமகன்களின் கூடாரமான போஸ்ட் ஆபீஸ் வளாகம்

வத்தலக்குண்டு, நவ. 22: கொடைரோடு ரயில் நிலையம் அருகே மெயின்ரோட்டில் போஸ்ட் ஆபீஸ் உள்ளது. இந்த அலுவலக வளாகத்திற்குல் போஸ்ட் பேங்க் மற்றும் கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டத்திற்கான பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவை இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும்குடிமகன்கள் அங்கேயே குடித்துவிட்டு போதையில் அலங்ேகாலமாக விழுந்து கிடப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் அலுவலகங்களுக்கு வருபவர்கள் அச்சத்துடனுடன் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே தெருநாய்களின் கூடாரமாக திகழும் இவ்வளாகம் தற்போது குடிமகன்களின் வசமாகியுள்ளது. எனவே, போஸ்ட் ஆபீசை சுத்தமாகவைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: