சின்னாளபட்டி, நவ. 22: ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர் கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டி கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து கருங்குளம் நிரம்புவதால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர் கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டி கண்மாய் என மூன்று கண்மாய்கள உள்ளன. ஆத்தூர் ராஜவாய்க்காலிலிருந்து வரும் மழை தண்ணீர் கருங்குளம், நடுக்குளம் நிறைந்து புல்வெட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் பாதை இயற்கையாகவே அமைந்துள்ளது.