திருப்பூர், நவ. 22: திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேக்கத்தால், ரோடு சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சீரமகை–்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூரில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இம்மழையால், தாழ்வாக உள்ள ரோடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை வெள்ளத்துடன், கழிவுநீரும் கலந்ததால், பல இடங்களில் குட்டையாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. பிரதான ரோடுகள் மற்றும் நகர பகுதிக்குள் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள கிளை ரோடுகள் மற்றும் வீதிகளில், மழைநீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. ரோடு அரிக்கப்பட்ட நிலையில், கனரக வாகனங்கள் சென்றதால், குழிகள் மற்றும் பள்ளங்கள் உருவாகியுள்ளன.