திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

திருப்பூர், நவ. 22:  திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 763 ஆக உயர்ந்துள்ளது.  இந்த நிலையில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருப்பூரை சேர்ந்த 75 வயது பெண், ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயது பெண் ஆகிய இருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 98 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 13,907பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: