திருப்பூர், நவ. 22: அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 128 மாணவியர்களுக்கு ரூ.4.82 லட்சம் கல்வி உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். கனரா வங்கியின் 115 வது நிறுவனர் நாள் தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சுமார் 128 மாணவியர்களுக்கு ரூ.4, லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பில் கல்வி உதவித்தொகையை கலெக்டர் விஜயகார்த்திகேயன் திருப்பூர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று வழங்கினார்.