ஈரோடு, நவ.22: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நேதாஜி தினசரி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வரத்தாகும் காய்கறிகள் மாநகர் மட்டும் அல்லாது மாவட்டத்தின் பிற பகுதி மக்களும், மளிகை கடை வியாபாரிகளும் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி
செல்வர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்றுப்புற மாவட்ட பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக காய்கறிகள் மகசூல் குறைந்தது. இதனால் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கும் காய்கறிகள் குறைவாகவே வரத்தாகியுள்ளது.