வில்லியனூர், நவ. 22: புதுச்சேரி வில்லியனூர் அடுத்துள்ள ஊசுட்டேரி, புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரிகளில் முதன்மையானதாக விளங்குகிறது. இது புதுச்சேரி-தமிழக பகுதிகளை உள்ளடக்கி 400 ஹெக்ேடர் பரப்பளவை கொண்டது. புதுச்சேரி 390 ஹெக்டேர் பரப்பளவும், தமிழகம் 410 ஹெக்டேர் பரப்பளவும் கொண்டுள்ளது. 15.54 சதுர கி.மீ நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்ட ஊசுட்டேரி, 4 கன
அடி நீர் கொள்ளளவை கொண்டது. இந்த ஊசுட்டேரிக்கு சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் இருந்தும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் இருந்தும் பருவமழையின் போது தண்ணீர் வருவது வழக்கம். இதனால் ஊசுட்டேரி சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து பலவகையான பறவைகள் ஏராளமானவைகள் வந்ததால் கடந்த 2008ல் புதுச்சேரி அரசு, ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் புதுச்ேசரி சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் படகு சவாரி விடப்பட்டது. இதன் மூலம் அரசு வருவாய் ஈட்டியது.