ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக பூத் கமிட்டி கூட்டம்

ஓட்டப்பிடாரம், நவ.22: குறுக்குச்சாலையில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில்  நடந்தது.  வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பல்வேறு திருத்தப்பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதனால் திமுக சார்பில் வாக்குச்சாவடிகள் தோறும் முகவர்கள் நியமிக்கப்பட்டு மேற்கண்ட பணிகள் நியாயமாக நடைபெறுகிறதா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு2 ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில் நியமிக்கப்பட்ட முகவர்களுடனான சந்திப்பு கூட்டம் குறுக்குச்சாலையில் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்து பூத் கமிட்டி உறுப்பினர்களின் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள்  வழங்கி பேசினார்.  

விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன் வரவேற்றார். இதில்  புதிதாக பெயர் சேர்ப்பதை கண்காணிப்பது, திருத்தம் செய்வதை பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளை முகவர்கள் தவறாமல் கண்காணிப்பது என கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட  ஒன்றிய கிளை கழக வாக்குச்சாவடிகளின் முகவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: