ஒட்டன்சத்திரத்தில் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்

ஒட்டன்சத்திரம், நவ. 21: ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால், பல இடங்களில் சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றிருந்தது. இதனால் பொதுமக்கள் சாலையின் நடுப்பகுதியில் நடந்து சென்று வந்தனர். அவ்வாறு சாலையின் நடுப்பகுதியில் செல்லும் போது வாகனங்கள் பொதுமக்கள் வருவதை தெரியாமல் மோதி விபத்து ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த நவ.18ம்தேதி செய்தி வெளியாகியது. இதன் எதிரொலியாக ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையின் ஓரம் மண்கள் கொட்டப்பட்டு, மழைநீர் தேங்காத வண்ணம் அமைக்கப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினகரனுக்கும, துரித நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

Related Stories: