திருப்பூர், நவ.21: திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தால் 1-1-2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் 1.1.2003 தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நவம்பர் 21, 22, 28, 29 மற்றும் டிசம்பர் 5, 6, 12, 13ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்கால அவகாசத்தில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு தேர்தல் அலுவலர், வாக்குச்சாவடி மைய அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்து ஒப்புகை சீட்டு பெற்று கொள்ளலாம். இது மட்டுமின்றி ஆன்லைன் மூலமும் www.nvsp.in பதிவு செய்து குறுச்செய்தி மூலம் பதிவை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.