போக்சோவில் கைதானவருக்கு 5 ஆண்டு சிறை

மதுரை, நவ. 20:  சாத்தங்குடியைச் சேர்ந்தவர் மாரி (50). இவர், திருமங்கலத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2016ல் பாலியல் டார்ச்சர் செய்தார். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மாரி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா, குற்றம்சாட்டப்பட்ட மாரிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார்.

Related Stories: