கோவை, நவ. 20: கோவையில் கொரோனா காரணமாக நேற்று 149 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் புதியதாக 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 71-ஆக உயர்ந்துள்ளது. மேலும், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை விட குணமடைந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.