வேலூர், நவ.20:வரும் 26ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.வேலூர் தலைமை தபால் அலுவலகம் அருகே பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேலு, பொருளாளர் பிச்சாண்டி, தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.