திண்டிவனம், நவ. 13: திண்டிவனம் கிளை சிறையில் ஜெயில் வார்டன் பணி சுமை காரணமாக கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் உமாபதி தெருவை சேர்ந்த ராமு என்பவர் மகன் பாரதி மணிகண்டன் (26). இவர் திண்டிவனம் கிளை சிறையில் இரண்டு ஆண்டுகளாக வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இதில் காவலர்கள் சுழற்சி முறையில் சென்ட்ரி பார்க்கும்போது மற்ற காவலர்கள் அனைவரும் ஸ்டூலில் அமர்ந்து சென்ட்ரி பார்த்து வருவதாகவும், பாரதி மணிகண்டன் சென்ட்ரி பார்க்கும்போது ஸ்டூலில் அமரக்கூடாது நின்று கொண்டே இருக்க வேண்டும்.