கலெக்டர் விளக்கம் பொதுமக்கள் அதிகம் பங்கேற்கும் விதமாக இணையவழி போட்டிகள்

திருச்சி, நவ.13: திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகளில் பொதுமக்களின் பங்கேற்பினை அதிகரிக்கும் விதமாக மாநில அளவில் தேர்தல்கள் தொடர்பான இணையவழி போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2020 மற்றும் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல், 2021 தொடர்பாக பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளில் பொதுமக்களின் பங்கேற்பினை அதிகரிக்கும் விதமாக மாநில அளவில் தேர்தல்கள் தொடர்பான இணையவழி போட்டிகள் தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு அலுவலகத்தின் இணைய தள முகவரியான www.elections.tn.gov.in < //www.elections.tn.gov.in/ > நடைபெறவுள்ளது.

சுவரொட்டி வரைதல், கவிதை மற்றும் பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் இப்போட்டியில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு அலுவலகத்தின் தேர்தல் இணையதளத்தில் ‘SVEEP போட்டி 2020 - இயங்கலை (ஆன்லைன்) போட்டிகள்’ என்ற இணையவழி (web portal) மூலமாக பங்கேற்கலாம். இப்போட்டிகள் அனைத்தும் இணைய தளம் மூலமாக மட்டுமே நடத்தப்படும். இந்தியாவில் தேர்தல்கள் மற்றும் 100 சதவீதம் வாக்காளர் பட்டியல் பெயர் பதிவு மற்றும் வாக்குப்பதிவினை அடைவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பதே இப்போட்டியின் முக்கிய கருத்துருவாகும். இப்போட்டியில் வரும் 18ம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 என முதல் 3 பரிசுகள் வழங்கப்படும்.

இப்போட்டியானது தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் மூலம் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் இது தொடர்பான விபரங்களை tiruchirappalli.nic.in < //tiruchirappalli.nic.in/ > என்ற திருச்சி மாவட்ட இணையதளத்தின் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். மேலும், நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான குறும்படம்/ உயிர்ப்பூட்டல் படங்கள்/ தேர்தல் பாடல்கள் போன்றவைகளைத் தயாரிக்கும் பொருட்டு ஆர்வமுள்ள ஊடக நிறுவனங்கள்/ தனிநபரிடமிருந்து விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதன் விவரங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு அலுவலகத்தின் இணைய தள முகவரியான www.elections.tn.gov.in < //www.elections.tn.gov.in/ > வெளியிடப்பட்டுள்ளது. விலைப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 18ம் தேதி மாலை 5 மணி என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: