விழுப்புரத்தில் பரபரப்பு டிஐஜி அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிப்பு

விழுப்புரம், நவ. 12: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் காவல்துறை டிஐஜி அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ஒரு   வாலிபர் தனக்கு யாரோ பில்லி, சூனியம் வைத்துவிட்டதாகவும், கொலை செய்ய பார்க்கிறார்கள் என்றும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். இதனை, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர். உடனே, அவர் பையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.உடல் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்து ஓடிவந்தனர். பின்னர், அவர்மீது பற்றிய தீயை அனைத்து காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.பின்னர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா மேலமணக்குடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் திருலோகசந்தர்(38) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் கூறியபடி யாரேனும் இவரை கொலை செய்ய முயற்சி செய்கிறார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: