சேலம், நவ.3: சேலம் செவ்வாய்பேட்டையில் அனுமதியின்றி பட்டாசு விற்ற 3 கடைகளில் போலீசார் சோதனை நடத்தி, வெடிகளை பறிமுதல் செய்து கடைகளுக்கு பூட்டு போட்டனர். தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சேலம் மாநகரில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை பஜார் தெருவில் அனுமதியின்றி 3 பட்டாசு கடைகளில் வியாபாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையிலான போலீசார். அந்த கடைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அதில், லைசென்ஸ் பெறாமல் கடையை திறந்து பட்டாசு பாக்சுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.