சேலம், நவ.3: சேலம் ஓமலூர் அடுத்த பச்சனம்பட்டியைச் சேர்ந்த தமாகா ெதாழிற்சங்க தலைவர் சின்னப்பன் மற்றும் சிலர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், பச்சனம்பட்டியைச் சேர்ந்த தம்புராஜ், தனது நிலத்தை அளவீடு செய்ய எஸ்பிஐ வங்கியில் பணம் கட்டி, ஓமலூர் தாசில்தாருக்கு விண்ணப்பித்தார். இதனை தொடர்ந்து பெண் சர்வேயர் ஒருவர், நில அளவைக்காக, பல அதிகாரிகளுக்கு ₹20 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார். வேறுவழியின்றி ₹17 ஆயிரம் கொடுத்த நிலையில், இரண்டு மாதமாகியும் இதுவரை நிலத்தை அளவீடு செய்ய வரவில்லை.