×

சிவன் ேகாயில்களில் அன்னாபிஷேகம்

திருச்சுழி, நவ. 1: திருச்சுழியில் உள்ளது திருமேனி நாதர், மாலையம்மன் கோயில். இங்கு நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து திருமேனிநாதருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர், அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மன் கோயில்கள் மற்றும் சாத்தூர் விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. 

Tags : Annabhishekam ,temples ,Shiva ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு