×

பாம்பு கடித்து உயிரிழந்த அதிமுக பிரமுகரின் குடும்பத்திற்கு நிதியுதவி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

சிவகாசி, நவ. 1: பாம்பு கடித்து உயிரிழந்த அதிமுக பிரமுகரின் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்கினார். சிவகாசி அருகே ஏ.லட்சுமியாபுரம் அதிமுக கிளை செயலாளர் வரதராஜ் (54). இவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். இதனை கேள்விப்பட்ட விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வரதராஜ் குடும்பம் வசிக்கும் ஏ.லட்சுமியாபுரத்திற்கு நேரடியாகவே சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து அமைச்சர் வரதராஜ் குடும்பத்திற்கு ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கினார். நிதியுதவி வழங்கிய அமைச்சருக்கு வரதராஜ் மனைவி பழனியம்மாள், மருமகன் கருப்பு, மருமகள் முன்னாள் அதிமுக கவுன்சிலர் காளியம்மாள் கண்ணீர் மல்க  நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராம், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், ஒனறிய மாணவர் அணி செயலாளர் ஜெய்ராம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : Rajendrapalaji ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...