×

ரேஷன்கடை ஊழியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி, நவ. 1: நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் தேனி நகர் பங்களா மேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பொன்அமைதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேதுராமன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கூட்டுறவுத்துறை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு டிஎன்சி, எஸ்சி பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், பணி வரன்முறை செய்யப்படாத ஐந்தாயிரம் பணியாளர்களை நிபந்தனைுயின்றி பணிவரன்முறை செய்ய வேண்டும். அனைத்து நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கொரானா ஊரடங்கு காலத்தில் பணி செய்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நியாயவிலைக்கடை பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Ration shop workers ,Theni ,
× RELATED தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்