ஆர்.எஸ்.மங்கலம், நவ.1: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து அரியான்கோட்டை, சாலைக்கிராமம் வழியாக இளையான்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் அரியான்கோட்டை முதல் வாதவனேரி வரை ரோட்டின் இருபுறங்களிலும் கருவேல முட்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிர்வரும் வாகனங்கள் தெரியாமல் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கருவேல முட்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.