×

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

திருவாரூர், நவ. 1: விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான 3 அவசர சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும், தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்களை பணிக்கு அமர்த்துவதை தடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ரயில் நிலையம் முன்பாக ராட்டை நூல் கோர்த்தவாறு அகிம்சை வழிப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் துரை வேலன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, மன்னார்குடி நகர தலைவர் கனகவேல், வட்டார தலைவர்கள் , சேவா தள மாவட்ட தலைவர் செல்வகணபதி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : parties ,Congress ,
× RELATED ஒடிசாவில் ஒரே தொகுதியில் 3 கட்சிகளில் போட்டியிடும் உறவினர்கள்