×

நலிவுற்ற சமையல் கலைஞர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்

மன்னார்குடி, நவ. 1: திருவாரூர் மாவட்ட சமையல் கலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் ரகுபதி, கணேசன் ஆகியோர் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், சமையல் கலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சாமிநாதன், சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், நலிவுற்ற சமையல் கலைஞர்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடன் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்யும் நடைமுறைகளை எளிமை படுத்த வேண்டும். கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட, நலவாரியத்தில் பதிவு செய்யாத சமையல் கலைஞர்களுக்கு மாதம் ரூ. 7500 என நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சிவசுப்பிரமணியன் வரவேற்றார். செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags : chefs ,
× RELATED தொழிலாளர் விதிமுறைகளில் மாற்றம்...