×

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தர்ணா, சாலை மறியல்

பெரம்பலூர், நவ 1: பெரம்பலூரில்மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்று போலீசார்அனுமதி மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 27 பேர் கைது செய்யப் பட்டனர்.
பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெற இருந்த தர்ணா போராட்டத்திற்காக புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
அதற்கு சட்ட ஒழுங்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து சாமியானா பந்தலை அகற்றினர். இதனால் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் பேருந்து உள்ளே செல்லும் வழியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி உள்ளிட்டோர் புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 27 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : party ,Congress ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...