×

27 பேர் கைது காவல்துறை சார்பில் நீத்தார் நினைவு தினம் பேச்சு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

பெரம்பலூர், நவ 1: பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக நீத்தார் நினைவு தினம் 2020-ஐ அனுசரிக்கும் வகையில் இணைய தளத்தில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி நிஷா பார்த்திபன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தமிழக காவல்துறையில் அக்டோபர் 21- ம் நாள் நீத்தார் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை பெரம்பலூர் மாவட்டத்தில் அனுசரிக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாணவ மாணவிகளுக்கு இணைய தளம் வழியாக பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள். பேச்சுப்போட்டியில் முதல் பரிசு எளம்பலூரைச் சேர்ந்த சசிந்திரன் மகள் லத்திகா , இரண்டாம் பரிசு இரூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகள் அபிராமவள்ளி மற்றும் மூன்றாம் பரிசு நடராஜன் மகள் காருண்யா ஆகிய மூன்று மாணவிகள் பெற்றனர். பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களை சிறப்பிக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் எஸ்பி நிஷா பார்த்திபன் மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது