×

புதிய நாட்டிய, நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய நிதியுதவி

பெரம்பலூர், நவ 1: பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்வதற்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர்(பொ) ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழில் சிறந்த நாட்டியங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு நல்கை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான, தமிழில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள், கலைக்குழுக்கள், கலை நிறுவனங்கள் விண்ணப்பப்படிவம் பெறவும், நிபந்தனைகள் பற்றி தெரிந்துகொள்ள 044- 2493 7471 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும், மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.11.2020 அன்று மாலை 5 மணிக்குள் உறுப்பினர் - செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி,பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600 028. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் மாவட்ட கலெக்டர் (பொ) ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா