×

விண்ணப்பிக்க அழைப்பு கொரோனா விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், நவ 1:  பெரம்பலூர்  தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவின்படி மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் வழிகாட்டுதலின் படி மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் தாமோதரன் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் இருசக்கர வாகனத்தில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து துவங்கி பாலக்கரை,சங்கு பேட்டை, துறையூர் ரோடு வழியாக அரசு மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு வழியாக மீண்டும் தீயணைப்பு நிலையத்தில் முடிவடைந்தது. இதில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஒலி பெருக்கி மூலம் கொரோனா தொற்று குறித்தும் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வலியுறுத்தியும், மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Tags : Corona Awareness Rally ,
× RELATED கொரோனா விழிப்புணர்வு பேரணி