×

முககவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கீழ்வேளூர், நவ.1: நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வலிவலம் கடைத்தெருவில் சுகாதார துறை சார்பில் முககவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதாரதுறை மேற்பார்வையாளர் தியாகராஜன் தலைமையில் வலிவலம் கடைத்தெருவில் முக கவசம் அவசியம் அணிவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கடைஉரிமையாளர்கள், கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் முககவசம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் செல்பவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பாலன், வலிவலம் காவல் நிலைய தலைமை காவலர் கணபதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...