×

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் நடமாடும் ரேஷன் கடைதிறப்பு

சீர்காழி, நவ.1: சீர்காழி அருகே சட்டநாதபுரம் மேட்டுத்தெரு, பனமங்கலம் பகுதிகளில் பொதுமக்கள் நலன்கருதி வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டமான அம்மா நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. நாகை மாவட்ட பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் கனகசபாபதி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் முருகேசன், சீர்காழி கூட்டுறவு சார்பதிவாளர் மணிகண்டன், கொள்ளிடம் கூட்டுறவு சார்பதிவாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி வரவேற்றார். சீர்காழி எம்எல்ஏ பாரதி, நடமாடும் ரேஷன் கடையை துவக்கிவைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் பூராசாமி சந்திரமோகன், முன்னாள் நகரமன்ற தலைவர் இறைஎழில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராஜமாணிக்கம், போகர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் ரிமா, ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சம்மாள், மாலினி, நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் மணிதிருமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ration shop ,opening ,Sattanathapuram ,Sirkazhi ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு