×

பைக் மீது லாரி மோதி தொழிலாளி சாவு மற்றொருவர் படுகாயம்

கரூர், நவ. 2: கரூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத லாரி மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். மற்றொருவர் காயமடைந்து சிகிச்சை பெறுகிறார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள வரிக்காபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(48). இவரின் நண்பர் பிச்சைமுத்து(46). நண்பர்கள் இருவரும் கடந்த 29ம் தேதி இரவு பைக்கில் கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தில் சென்றனர். பைக்கை பாலமுருகன் ஓட்டிச் சென்றார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் மாட்டிக் கொண்ட பிச்சைமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த பாலமுருகன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : injured ,
× RELATED திருச்சி அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதியதில் 12 பேர் காயம்..!!