×

பனி மூட்டத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் வலியுறுத்தல்

கரூர், நவ. 1: கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் பரவி கிடக்கும் குப்பைகள் விரைந்து அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர், கரூர் திருவிக சாலை, மார்க்கெட் வளாகம், வாழைத்தார் கமிஷன் மண்டி பகுதி போன்ற பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே பரவி கிடக்கும் இந்த குப்பைகளை உடனடியாக அகற்றி தூய்மையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : parts ,city ,
× RELATED போலி மின்னஞ்சலை உருவாக்கி ரூ.43 லட்சம் உதிரி பாகங்களை விற்ற வாலிபர் கைது