×

ராயனூர் செல்லாண்டிபாளையம் பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

கரூர், நவ. 1: ராயனூர் சாலை செல்லாண்டிபாளையம் பிரிவுச் சாலையின் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூரில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனூர் பிரதான சாலையின் வழியாக சென்று வருகின்றன. இந்த சாலையில் திருமாநிலையூர் பகுதியை தாண்டியதும் செல்லாண்டிபாளையம் செல்வதற்கான சாலை பிரிகிறது. மேலும், இந்த சந்திப்பு பகுதியிலேயே பெட்ரோல் பங்க்கும் உள்ளது. இதனால் அதிகளவு வாகன போக்குவரத்தும் இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செல்லாண்டிபாளையம் பிரிவு பகுதியில் அடிக்கடி வாகன குறுக்கீடு காரணமாக வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அல்லது பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வரும் இந்த கோரிக்கையை ஏற்று இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : section road ,Rayanoor Cellandipalayam ,
× RELATED ராயனூர்- செல்லாண்டிபாளையம் சாலையை...