×

பனி பொழிவு துவக்கம்

வால்பாறை, நவ. 1: வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இவ்வருடம் சென்ற வருடத்தை காட்டிலும் பனியின் தாக்கம் 15 நாட்களுக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டது. பனி தாக்கத்தில் காலை நேரத்தில் குளிர் அதிக அளவு உள்ளது. பனிகாற்று வீசுவதால் வீடுகளுக்கு உள்ளும் பகலில் குளிர் நிலவுகிறது. மேலும் கடும் குளிர் நிலவுவதால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்