திருச்சி பஸ் ஸ்டாண்டில் முதியவர் திடீர் சாவு

திருச்சி, அக். 30: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பஸ்கள் நிறுத்தும் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 60 வயது முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் சுருண்டு விழுந்து துடி துடித்தார். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கண்டோன்மென்ட் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: