×

சுற்றுலாத்துறை சார்பில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கும் பணி

திருவாரூர், அக்.30: திருவாரூர் நகரில் சுற்றுலாத்துறை மூலம் சாலையோரங்களில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில், திருக்கண்ணமங்கை பெருமாள் கோயில், வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக சுற்றுலா தலங்கள் மற்றும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற இடங்களுக்கு செல்லும் வழி மற்றும் அந்தந்த பகுதிகளுக்கு எத்தனை கிலோ மீட்டர் தூரம் போன்ற விவரங்கள் குறித்து சுற்றுலாத்துறை மூலம் பெயர்பலகை அமைக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் நகர் உட்பட மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் பெயர் பலகை வைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் மாதவன் கூறுகையில், ஆசிய வங்கி வளர்ச்சி நிதி உதவியுடன் தமிழகம் முழுவதும் இதுபோன்று சுற்றுலாத்துறை மூலம் பொதுமக்கள் நலன்கருதி பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமன்றி சுற்றுலா தளம் குறித்த வரைபடம், பெயர் பலகையும் விரைவில் வைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...