×

இன்று மிலாடி நபி

புதுக்கோட்டை, அக்.30: புதுக்கோட்டை மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு இன்று மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் இன்று (30.10.2020) மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் விற்பனை நடைபெறாமலும், மூடப்பட்டும் இருக்க வேண்டும்.எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் (பார்) மற்றும் ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் மேற்கண்ட ஒரு நாள் மட்டும் 30.10.2020 மது விற்பனை ஏதும் நடைபெறாது, அவை யாவும் மூடப்பட்டிருக்கும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Milady ,Prophet ,
× RELATED அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து...