×

சூளகிரி பகுதி 5 ஏரிகளில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது

சூளகிரி, அக்.30: சூளகிரி பகுதியில் உள்ள 5 ஏரிகளில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.சூளகிரி தாலுகா கோரிப்பள்ளி ஊராட்சி, காமன்தொட்டி ஊராட்சிகளில் 5 ஏரிகள் நிரம்பி உள்ளது. நல்லகானகொத்தப்பள்ளி ஏரி நிரம்பியதையடுத்து 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. கட்லா, ரோகு, பாறை உள்ளிட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கோபம்மா சக்கரளப்பா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கலந்து கொண்டு 5 ஏரிகளில் தலா 20 ஆயிரம் மீன் குஞ்சுகள் வீதம், ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விட்டார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அதிகாரிகள் மணிகண்டன், சுப்பிரமணி மற்றும் பிடிஓக்கள் விமல் ரவிக்குமார், பாலாஜி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் புஷ்பராஜ், செயலர் விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : lakes ,area ,Choolagiri ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!