×

திருப்பூர் முருகம்பாளையத்தில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

திருப்பூர், அக். 30:  திருப்பூர், முருகம்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் கடையை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் முருகம்பாளையத்தில் இருந்து பாறைக்காடு செல்லும் வழியில் கடந்த ஒரு மாதத்துக்கும் முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ளதால் இக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஏற்கெனவே மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதே பகுதியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சம்பவயிடம் சென்ற வீரபாண்டி போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் உதவி ஆணையர் நவீன்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வரும் 2ம் தேதி திங்கள்கிழமைக்குள் உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக முருகம்பாளையம் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags : store ,Tasmac ,Tirupur Murugampalayam ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை