ஈரோடு, அக்.30: ஈரோட்டில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.ஈரோடு சென்னிமலை ரோடு அரசு ஐடிஐ அருகே உள்ள கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த மனோகரன் மகன் பிரித்தாம் (22). இவர், பெருந்துறையில் உள்ள தனியார் டீ கப் தயாரிக்கும் நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை மனோகரன், கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. மனோகரன் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பிரித்தாம் மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரித்தாம், வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.