ஈரோடு, அக்.30: காரீய நஞ்சு தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவங்கியது.காரீய நஞ்சு தடுப்புக்கான சர்வதேச விழிப்புணர்வு வாரம் அக்.25ம் தேதி முதல் 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் காரீய நஞ்சு தடுப்புக்கான விழிப்புணர்வு வாகன துவக்க நிகழ்ச்சி நடந்தது. இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் சி.என்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரசார விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தார். தமிழக பழங்குடியின மக்கள் சங்க தலைவர் வி.பி.குணசேகரன் முன்னிலை வகித்தார்.இதில், பெயிண்ட்களில் அளவுக்கு அதிகமாக காரீயம் கலக்கப்படுகிறது. இக்கலப்பு, மிகப்பெரிய நஞ்சு தன்மையை ஏற்படுத்தும். உலக அளவில் குழந்தைகள் எதிர் நோக்கும் மிக ஆபத்தான அச்சுறுத்தலில், காரீயம் கலப்பு முக்கியமானதாகும்.