விருத்தாசலம், அக். 30: விருத்தாசலத்தில் நடந்த திருமண விழாவில் தம்பதிக்கு வெங்காயம் பரிசாக வழங்கினர். வடமாநிலங்களில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் வெங்காயம் இறக்குமதி இல்லாததால் தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ சின்ன வெங்காயம் சுமார் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெங்காயம் கிடைக்காத சூழ்நிலையில் சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேற்று விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.