புதுச்சேரி, அக். 30: புதுவையில் நேற்று புதிதாக 181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று 4,001 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-121, காரைக்கால்-8, ஏனாம்-19, மாகே-33 என மொத்தம் 181 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.70 சதவீதமாக உள்ளது.15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுவையில் 20 சதவீதம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 3,01,167 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 2,62,971 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது.