சிவகிரி, அக். 30: தொடர்மழையால் சிவகிரியில் கூலி தொழிலாளியின் வீடு இடிந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. 27ம்தேதி மட்டும் 87 மி.மீ. மழை பதிவானது. நேற்று சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலையில் சிவகிரி கீழமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாபுகுட்டி என்பவரது வீடு திடீரென இடிந்து விழுந்தது.