புளியங்குடி அருகே மொபட் திருடியவர் கைது

புளியங்குடி, அக். 30:  புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் தொடர்ந்து பைக், மொபட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் திருடு போவது தொடர்கதையாக நடந்தது. இதையடுத்து புளியங்குடி எஸ்ஐ காசிவிஸ்வநாதன் மற்றும் காவலர்கள் மதியழகன், சிவராமகிருஷ்ணன் மற்றும் தனிப்பிரிவு காவலர் ஜெயராஜ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வெள்ளகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மங்களராஜ் மகன் முருகன்(30) இரு சக்கர வாகனங்களை திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு மொபட்டை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பாக செயல்பட்ட போலீசாரை டிஎஸ்பி சுவாமிநாதன், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் பாராட்டினர்.

Related Stories: