×

குண்டாசில் ரவுடிகள் மூவர் கைது

தூத்துக்குடி, அக். 30: தூத்துக்குடியில் கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ரவுடிகள் மூவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.தூத்துக்குடி, முத்தையாபுரம் சுபாஷ் நகரை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் சங்கரேஸ்வரன் என்ற எலி (22). இவர் கடந்த 5ம்தேதி அப்பகுதியில் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கி கொல்ல முயன்றார். வழக்குப் பதிந்த முத்தையாபுரம்  போலீசார் சங்கரேஸ்வரன் என்ற எலியை கைது செய்தனர். கடந்த மாதம் 28ம் தேதி கயத்தாறு அருகே நொச்சிக்குளம்- சத்திரப்பட்டி சாலையில்  தெற்கு மயிலோடையைச் சேர்ந்த உடையார் பாண்டியின் மனைவி மகேஸ்வரி (31) என்பவரிடம் மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் அய்யனார் (30), வாலமலை மகன் சூர்யா (20) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கயத்தாறு போலீசார் அய்யனார் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.  இந்நிலையில் அய்யனார், சூர்யா மற்றும் சங்கரேஷ்வரன் என்ற எலி ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார்  கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் பரிந்துரைத்தார். இதையடுத்து கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் பேரில்  3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், முத்து ஆகியோர் பாளை மத்திய சிறையில் வழங்கினர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...