தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் வேலூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு

வேலூர், அக்.30: வேலூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு அரியூர் மலைக்கோடி விஸ்வநாதன் நகர், அண்ணாநகர், சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கலெக்டர், டிஆர்ஓவிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று வேலூர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர குழு உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, முன்னாள் எம்எல்ஏ லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘மலைக்கோடி பகுதியில் வசிக்குக்கு ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். போராட்டம் நடத்தியும் பலனில்லை. கண்டுகொள்ளாமல் உள்ளனர். எங்களுக்கு உடனே பட்டா வழங்கவேண்டும்'''' என்றனர்.

Related Stories: